பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வாடகை வசூலிக்க பரிந்துரை: சென்னை உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், குறித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. காரணம், பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொடிக்கம்பம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜனவரியில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்ததோடு, கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கொடிக்கம்பங்களை ஜூலை 02-க்குள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டியது வரும் என்று எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டுமெனவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court recommends charging rent for flagpoles and political party meetings in public places


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->