திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் : கனிமொழி எம்.பி., அமைச்சர் நேரு ஆய்வு!
Arrangements for the Kumbhabhishekam festival at the Tiruchendur temple MP Kanimozhi and Minister Nehru review
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கனிமொழி எம்பி, அமைச்சர் நேரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வருகிற ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து இன்று, திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Arrangements for the Kumbhabhishekam festival at the Tiruchendur temple MP Kanimozhi and Minister Nehru review