'மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்'; எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


'எரிவாயு விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசுக்கு  வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது;

''மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!. தேர்தலுக்கு முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்கு ஆசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.

இந்த எரிவாயு விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M.K. Stalin urges the immediate rollback of the gas price hike


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->