இன்போசிஸின் புதிய திட்டம்; ஆந்திராவில் 20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,500 பேருக்கு வேலை..! - Seithipunal
Seithipunal


ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்க தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்போசிஸ் ஐ.டி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கரில் நிரந்தர வளாகம் அமைக்​கப்படவுள்​ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்ளதாக கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்​தத் துறை​முக நகரில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமித​மாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்​பத்​தில் 250 ஊழியர்​களு​டன் தொடங்​கப்​பட்ட இந்த மையம், தற்​போது 1,900 ஊழியர்​களு​டன் இயங்கி வரு​கிறதாகவும், விரை​வில் மேலும் 7500 பேர் பணி​யாற்​று​வதற்​கான இடவச​தி​கள் தயார் செய்யப்​பட​வுள்​ளதாக குறிப்பிட்டுள்ளது.

20 ஏக்​கரில் சிறந்த ஐ.டி நிறுவனமாக அமைய​வுள்ள இந்த நிரந்தர வளாகம் இப்​பகு​தி​யின் நீண்​ட​கால வளர்ச்​சிக்​குச் சான்​றாக அமை​யும் என்றும், இந்த மையத்​திற்​காக விசாகப்​பட்​டினம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் இருந்து 1,000 புதிய பட்​ட​தா​ரி​களும், 500 அனுபவம் வாய்ந்த பணியாளர்​களும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர் என்று இன்போசிஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், இது ஆந்​திர அரசின் திறன் மேம்​பாட்​டுத் திட்​டங்​களுக்​குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்​படுவதாகவும் தெரிவித்துள்​ளது.

இது குறித்து ஆந்​திர மாநில தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளதாவது; வி​சாகப்​பட்​டினம் ஒரு சிறந்த ஐடி மையமாக உரு​வெடுத்து வரு​வது, அங்​குள்ள உள்​ளூர் திறமையாளர்​களின் வலிமை​யைக் காட்​டு​கிறது என்றும், ஆந்​திர மாநிலத்​தைத் தொழில்​நுட்​பம் மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக மாற்​று​வதே எங்​களது நோக்​கம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்​போசிஸ் நிறு​வனத்​தின் இந்த விரி​வாக்​கம் எங்​களது கொள்கை முடிவு​களுக்​குக் கிடைத்த அங்​கீ​கார​ம் என்றும், தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் ஆந்​திர மாநிலம் தனது நிலை​யைத் தொடர்ந்து வலுப்​படுத்​தி வருவதாகவும் நாரா லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Infosys Permanent Campus in Andhra Pradesh Spans 20 Acres


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->