மக்கள் கவனத்திற்கு! இனி படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் உயரும்...! - சென்னை வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக,  வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

இருப்பினும், கடந்த சில தினங்களாகவே காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என  தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

இதுத் தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,"தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்.

உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 1°-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.மேலும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்" எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention people Temperatures will gradually rise in Tamil Nadu from now on Chennai Meteorological Department


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->