வேலியே பயிரை மேய்ந்த சோகம்.. இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்..! திருநெல்வேலியில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கல்லிடைகுறிச்சியை சார்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் பெயர் நம்பிராஜன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருந்து வந்த நிலையில்., ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் பகுதியை சார்ந்தவர் ஆதிமூலம். இவர் நம்பிராஜனின் தாய்மாமன் ஆவார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில்., இவருக்கு உதவியாக நம்பிராஜன் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். 

இந்த தருணத்தில்., நம்பிராஜனிற்கும் - ஆதிமூலத்தின் மனைவிக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த ஆதிமூலம் மற்றும் அவரின் உறவினர்கள் நம்பிராஜனை கண்டிக்கவே., நம்பிராஜன் இதனை கண்டுகொள்ளாது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். ஆதிமூலத்திடம் பணியில் இருந்து விலக்கம் அடையாமல்., தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., அங்குள்ள தனியார் தோட்டத்தில் ஆதிமூலம் ஆட்டுக்கிடையை அமைத்து., கடந்த மாதம் 31 ஆம் தேதியன்று ஆதிமூலம் மது அருந்துவதற்கு நம்பிராஜனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். தோட்டத்தில் இருவரும் மது அருந்திவிட்டு இருந்த சமயத்தில்., கள்ளக்காதல் தொடர்பான பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிமூலம்., இரும்பு கம்பியின் மூலமாக நம்பிராஜனை தாக்கியுள்ளார். 

died, suicide attempt, killed, murder,

இதனால் படுகாயமடைந்த நம்பிராஜன் அலறலவே., அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தோட்டத்திற்கு வந்த சமயத்தில் இரத்த வெள்ளத்தில் நம்பிராஜன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்து., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி நம்பிராஜன் நேற்றிரவு இறந்துள்ளார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli illegal affair murder police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->