குடும்ப சண்டையால் விபரீதம்.. மகளின் பிறந்தநாளன்றே, மகளும் தாயும் எடுத்த விபரீத முடிவு..!!
in theni mother daughter suicide due to family problem
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சார்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவியின் பெயர் அனுசுயா தேவி (வயது 33). இந்த தம்பதிகளுக்கு ஷாருதர்சனா என்ற 14 வயது மகள் உள்ள நிலையில், 12 வயதுடைய நிகில் என்ற மகனும் இருக்கிறார். இவர்களில் ஷாருதர்சனா 9 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நிகில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், லட்சுமணன் மதுபான கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், இவர்களுக்குள் இப்பிரச்சனை அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இந்த சமயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பிரச்சனையில் அனுசுயா தேவி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அங்குள்ள ராயப்பன்பட்டி பகுதியில் வீடெடுத்து தங்கியுள்ளார்.
இதனையடுத்து லட்சுமணன் மட்டும் கூடலூரில் வசித்து வந்த நிலையில், நேற்று மதிய நேரத்தில் தனது மகள் ஷாருதர்சனாவின் பிறந்தநாள் தினத்தை அனுசுயா தேவி கொண்டாடியுள்ளார். இங்கு லட்சுமணனும் வருகை தந்திருந்த நிலையில், மகளின் பிறந்தநாளன்றே இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதனையடுத்து லட்சுமணன் தனது மகனை அழைத்துக்கொண்டு இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அனுசியாதேவியின் இல்லக்கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே செல்கையில் தாயும் மகளும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மகளின் பிறந்தநாளன்றே தாயும் - மகளும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni mother daughter suicide due to family problem