தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்..நயினார் நாகேந்திரன் சொல்கிறார்!
In Tamil Nadu the A D M K B J P coalition government will be established Nainar Nagendran says
மத்திய அரசு கொடுக்கின்ற எல்லா திட்டத்திலும் 70 சதவீத நிதியை பயன்படுத்திக் கொண்டு மாநில அரசு செய்ததுபோல் முதல்-அமைச்சர் காட்டி கொண்டிருக்கிறார் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருவாரூரில்,பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மதுரையில் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மதுரை மாநாட்டிற்கு தடங்கல் ஏற்படுத்தி வருவது சரியானதல்ல. ஆனால் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும்.தி.மு.க. தோல்வி பயத்தில் இருந்து வருகிறது. விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் உறுதி என்ற நிலையில் மக்கள் உறுதியாக காத்திருக்கின்றனர்.டாஸ்மாக் ஊழலில் கோர்ட்டு தடை உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடை முடிந்த பின்பு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு கொடுக்கின்ற எல்லா திட்டத்திலும் 70 சதவீத நிதியை பயன்படுத்திக் கொண்டு மாநில அரசு செய்ததுபோல் முதல்-அமைச்சர் காட்டி கொண்டிருக்கிறார். தி.மு.க தமிழ் பண்பாடு, கலாசாரத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர். எல்லா கட்சியினரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது எனது கருத்து. அப்போதுதான் தி.மு.க.வை அகற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
In Tamil Nadu the A D M K B J P coalition government will be established Nainar Nagendran says