அதிவேகத்தில் வந்து எதிரெதிரே மோதிக்கொண்ட பேருந்துகள்..! அலறிய பயணிகள்., பள்ளி மாணவர்கள்..!! சேலத்தில் பெரும் சோகம்.!!
in selam govt bus accident 50 passengers got injured
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் ஏற்படுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் சில சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் தங்களின் உயிரை பரிதாபமாக இழந்து வருகின்றனர்.
சேலத்தில் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து சேலம் நகரினை நோக்கி சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்தானது சென்று கொண்டு இருந்தது.
இந்த பேருந்து அங்குள்ள இராமலிங்கபுரம் பகுதியை அடுத்துள்ள அயோத்தி பகுதியில் வலது புறமாக திரும்பிய சமயத்தில்., பேருந்தில் எதிர்புறத்தில் இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்தில்., அரசு பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் படுகாயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் அலறித்துடித்தனர்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பதறியடித்து., விபத்தில் சிக்கியவர்களை மீட்ட நிலையில்., இது குறித்து காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்., இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam govt bus accident 50 passengers got injured