மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் கைது!
Sexual harassment of a student tailor shop owner arrested
தென்காசி மாவட்டம் கடையம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டுசெல்கிறது,குறிப்பாகபள்ளி,கல்லூரி,மற்றும்வேலைசெய்யும்நிறுவங்களின்பெண்களுக்குஎதிரானபாலியல்குற்றசம்பவங்களும்நடந்துவருவதைநம்மால்செய்திகள்மூலம்பார்க்கமுடிகிறது,அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளுக்குஆசிரியர்கள்பாலியல்தொல்லைகொடுத்தபலஆசிரியர்கள்போக்சோசட்டத்தில்கைதும்செய்யப்பட்டுள்ளனர்,இந்தநிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த தையல் கடைக்காரர் முருகன்12 வயதான 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் மாணவியின் பெற்றோரிடம் இது குறித்து கூறியதனை தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sexual harassment of a student tailor shop owner arrested