எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டு விழா நடத்திய மகளிர் குழுவினர்!
Women's group organized a tribute event for the opposition party leader
ஒதியம்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிக்க உதவி புரிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களுக்கு ஒதியம்பட்டு மகளிர் குழு சார்பாக பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன் ஆலயத்தை கட்டி முடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அரசு உட்பட பல்வேறு இடங்களில் நிதி உதவி பெற்றுத்தந்தும், தனது சொந்த நிதியையும் வழங்கிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்களுக்கு ஒதியம்பட்டு மகளிர் குழு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களுக்கு மகளிர் அணி தலைவி மலர், பொற்கொடி, லட்சுமி, குப்பு, பாக்யா, தாட்சாயினி, கனகவல்லி, பத்மா, சுலோச்சனா உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் மகளிர் குழுக்கள் சார்பாக கோவிலில் உள்ள அம்பாளின் சிலைக்கு ரூபாய் 14 ஆயிரம் மதிப்பிலான நகைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில், ஆலய நிர்வாக அதிகாரி பற்குணத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மகாலிங்கம், மூர்த்தி, சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா பேசுகையில், தொகுதியில் அடிப்படை வசதிகள் பெரும்பாலும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆலய கட்டுமான பணியை சிறப்பாக கட்டிமுடிக்க உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மேற்கொண்டு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தால் அதை உடனடியாக செய்து கொடுப்பேன் என இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், பாராட்டு விழா ஏற்பாடு செய்த மகளிர் குழுவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
English Summary
Women's group organized a tribute event for the opposition party leader