ஒடிசாவில் கலப்புத் திருமணம்: 40 பேர் ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் மொட்டை அடிப்பு! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்த ஒரு பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர், சமூக அழுத்தத்தின் காரணமாக "சுத்திகரிப்பு சடங்கு" என்ற பெயரில் மொட்டை அடிக்கப்படும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் காசிபூர் வட்டாரத்தின் பைங்கனகுடா கிராமத்தில் நடந்தது. பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்த கலப்புத் திருமணம் கிராம மக்களில் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், பெண்ணின் குடும்பம் சமூக புறக்கணிப்புக்கு ஆளானது.

குடும்பத்தினர் மீண்டும் சமூகத்தில் ஏற்கப்பட வேண்டும் என்றால், "சுத்திகரிப்பு சடங்கு" செய்ய வேண்டும் என கிராம மக்கள் வற்புறுத்தினர். மறுத்தால் நிரந்தர புறக்கணிப்பு எதிர்படும் என எச்சரிக்கையிட்டனர்.

அதன்படி, அந்த குடும்பம் உள்ளூர் தெய்வத்திற்கு விலங்குகளை பலியிட்டு சடங்கை நடத்தியது. பிறகு 40 குடும்பத்தினருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, காசிபூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் சோய் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுபோல, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பர்கர் மாவட்டத்தில் கலப்புத் திருமணம் செய்த ஒருவர் இறந்தபோது, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிகரச் சம்பவமும் நடந்திருந்தது.

ஒடிசா அரசு, கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்காக ₹2.5 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mass marriage in Odisha 40 people get purification in the name of ritualistic head shaving


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->