2026-ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி.. நாராயணசாமி நம்பிக்கை!
In 2026 the Congress will rule in Puducherry Narayanasamy is hopeful
2026-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்ததாத தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி பெட்ரோல்-டீசல் , பேருந்து,கலால் ஆகிய வரிகளை உயர்த்தி உள்ளார். 2026-ஆம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்,
வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை.
பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. இலவச அரிசி திட்டத்தில் மாதம் ரூ.2 கோடி ஊழல் பணத்தை ஆட்சியாளர்கள் பெறுகின்றனர்.100/100 சதவிகிதம் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் ஊழல் அதிகாரிகள் அகற்றப்படுவார்கள்.
2026-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
In 2026 the Congress will rule in Puducherry Narayanasamy is hopeful