மாணவர்களுக்கு பரிசு வழங்கிய MLA!  - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டியில் கல்பனா சாவ்லா கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். 
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மஹாலில் கல்பனா சாவ்லா கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய அளவில் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற, அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டி அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் பொருட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது .

விழாவிற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ,நகர் கழகச் செயலாளர் பூஞ்சோலை சரவணன், கவுன்சிலர்கள் முத்துராமன், சரவணன் ,பொன்முருகன், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் சாந்தி குமார் மற்றும் நிர்வாகிகள் சுசிலா, நந்தினி ஆகியோர் செய்து இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The MLA presented awards to the students


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->