அத்துமீறும் இலங்கை கடற்படை.. 13 தமிழக மீனவர்கள் கைது..! கண்ணீரில் பரிதவிக்கும் கிராம மக்கள்.!!
in puthukottai fishermen arrest by srilankan navy force
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதியை சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள்., 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீன் பிடிப்பதற்கு கடந்த மாதம் 15 ஆம் தேதியன்று கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நள்ளிரவு நேரத்தில் கச்சத்தீவிற்கு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த நிலையில்., இப்பகுதியில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதை கண்ட இளநகை கடற்படையினர்., எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டு இருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர். மேலும்., மீனவர்கள் படகுகளை கறைக்கு திருப்புவதற்கு முன்னதாகவே கடுமையாக எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் பதறிப்போன தமிழக மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து கண்ணீருடன் கரை திருப்பினர்.
இந்த நிலையில்., இன்று இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 38 கிமீ தொலைவில் இருக்கும் நெடுந்தீவு இலங்கை அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட தீவாக இருந்து வரும் நிலையில்., இத்தீவின் இந்திய எல்லைப்பகுதியில் புதுக்கோட்டையை சார்ந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
மேலும்., எல்லையை கடந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சார்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் மீன்படி வலைகள் மற்றும் மீன்பிடி படகுகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் இருக்கும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthukottai fishermen arrest by srilankan navy force