நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி.! கோவையில் பேரதிர்ச்சி.!!
in Coimbatore girl attempt suicide police investigation going on
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவர் ரவி. இவரது மகளின் பெயர் சினேகா (வயது 19). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடத்தில் பயின்று வருகிறார்.
சினேகா இதே பகுதியில் தனது தோழியுடன் தனியாக அறையெடுத்து தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில்., இன்று காலை சுமார் 5 மணியளவில் விடுதியை விட்டு மாணவி வெளியேறி வந்துள்ளார்.
பின்னர் அங்குள்ள கோயம்புத்தூர் - அவிநாசி சாலைக்கு சென்ற மாணவி., திடீரென தான் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிவிட்டு தீவைத்துக்கொண்டுள்ளார். உடலில் தீ பற்றி எறிந்த நிலையில் அலறித்துடித்துள்ளர்.
இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிய மாணவிகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வரும் நிலையில்., இது குறித்து பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்கொலை காரணத்திற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்., அதிகாலை நேரத்தில் சாலையில் கல்லூரி மாணவி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Coimbatore girl attempt suicide police investigation going on