உடன் வாழ மறுத்த மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்.. சென்னையில் பரபரப்பு..!
Husband who tried to kill wife who refused to live with him
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் சௌந்தர். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சந்தியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சந்தியா மீது சந்தேகப்பட்டு அவருடன் சௌந்தர் தகராற்றில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இதனால், அவருடன் வாழபிடிக்காமல் சந்தியா அவரை விட்டு விலகி கடந்த ஓராண்டாக தனது பாட்டி வீட்டில் வசித்து கொண்டு அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று, சென்னைக்கு வந்த சௌந்தர் சந்தியாவுடன் பேசியுள்ளார்.
அப்போது அவர் தன்னுடன் வருமாறு சந்தியாவை அழைத்துள்ளார். ஆனால், அவர் அவருடன் வாழ மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் சந்தியாவை அவர் வைத்திருந்த கத்தியால் சரமாறியாக குத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் அவர் சௌந்தர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த சந்தியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சௌந்தரை கைடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband who tried to kill wife who refused to live with him