காதல் மனைவியுடன் தகராறு.! கணவர் எடுத்த விபரீதம் முடிவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் காட்டூர் மூலப்பாட்டையான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (26). இவர் துர்கா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று மதியம் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டதால், துர்கா குழந்தையை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையடைந்த சுரேஷ்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இரவு துர்கா வீட்டிற்கு வந்தபோது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அழகாபுரம் போலீசார் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband commits suicide in salem


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->