மாநில எல்லை தாண்டியும் தொடர்ந்த வேட்டை...! பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்... சென்னை போலீஸிடம் வசமாகச் சிக்கிய பிரபல ரவுடி...!
hunt continues even across state border Ganja worth several lakhs seized famous rowdy caught by Chennai police
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்ததாக கூறப்படும் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கார்த்திக், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காவலர்களின் அதிரடி சோதனையில் சிக்கினார். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கார்த்திக்கை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளியுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த கார்த்திக் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் வழியாக சென்னைக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ரெயில்வே காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி வந்த ரெயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணம் செய்த கார்த்திக்கை காவலர்கள் அடையாளம் கண்டு மடக்கிப் பிடித்தனர்.பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 4 கிலோ கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வருவதற்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், இதன் மூலம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்யும் நபர்கள் யார், கார்த்திக்குடன் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்படும் முழுமையான வலையமைப்பையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
English Summary
hunt continues even across state border Ganja worth several lakhs seized famous rowdy caught by Chennai police