ரூ.4.58 கோடியை ஆட்டைய போட்ட வங்கி பெண் அதிகாரி சிக்கியது எப்படி?
How did the bank female officer who embezzled 458 crores get caught?
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை ஆட்டைய போட்ட வங்கி பெண் அதிகாரி ஒருவர் அந்த நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்து உள்ளார்.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் பிரபல தனியார் வங்கியின் பெண் அதிகாரி சாக்சி குப்தா, இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.சமீபத்தில் இவருக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய கையில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெரும் தொகையை எடுத்து கொண்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெரும் தொகையை பயன்படுத்தி கொண்ட தகவல் ராஜஸ்தானின் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வங்கி அதிகாரி சாக்சி குப்தா 43 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடி நிதியை எடுத்து உள்ளார். இந்த மோசடி பற்றி தெரிய வந்ததும் புகார் அளிக்கப்பட்டது.
இதுபற்றி உத்யோக் நகர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் முகமது இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறும்போது, சாக்சி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிதியை பயன்படுத்தி பங்கு சந்தையில் அவர் முதலீடு செய்து உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.வங்கி பெண் அதிகாரி ஒருவர்43 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடி நிதியை ஆட்டைய போட்ட வங்கி பெண் அதிகாரி ஒருவர் அந்த நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்து உள்ள சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
How did the bank female officer who embezzled 458 crores get caught?