நோயாளியின் 5 பவுன் தங்க சங்கிலியை விழுங்கிய மருத்துவமனை ஊழியர் - நெல்லையில் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள். கணவரை இழந்த இவர் தனது மகன் சங்கர சுப்பிரமணியனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப்பம்மாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதனால் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சுப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை மருத்துவமனை ஊழியர் ராமர் என்பவர் பறித்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பம்மாள் கத்திக் கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமர் அங்குள்ள கழிவறைக்குள் ஓடிச் சென்றார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து விசாரித்தனர். அப்போது, ராமர் நகையை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராமருக்கு ‘இனிமா' மருந்து கொடுத்து 5 பவுன் நகையை வெளியே எடுத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு ராமரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hospital employee arrested for steal patient gold chain in tirunelveli


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->