வெளியாட்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது; கல்லூரிகள், பல்கலைகளுக்கு உயர்கல்வித்துறை செயலர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும்  பல்கலைகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.

 

மனைவி பாலியல் வன்கொடுமை  சம்பவத்திற்கு பிறகு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. 

அத்துடன், அண்ணா பல்கலை விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. வெளியாட்களின் நடமாட்டம் இருந்தால், உடனே பதிவு செய்ய வேண்டும் என்றும் செயலரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி நிறுவன வளாகத்திற்குள் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது கட்டாயமாகும். ஏதேனும் புகார்கள் எழுந்தால், கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை முறையாக கடைபிடிக்க வேண்டும். காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்கள் அதனை பயன்படுத்த செய்ய வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ள முடியாது. துணைவேந்தர்கள், பதிவாளர்கள், டீன்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Higher Education Secretary orders colleges and universities


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->