இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை; மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு முழுவதும் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த  பெரு மேக வெடிப்பில் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இந்தநிலையில் வடக்கு ஆந்திராவிற்கு அருகே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அரபிக்கடல் வரை நிலவும் தாழ்வுப் பகுதி காரணமாக மராட்டிய மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக  மும்பை, தானே மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் வானிலை மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதேபோல பல இடங்களில் மழை பெய்தது.

நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 19-ந்தேதி வரை மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain poured throughout the night normal life affected in Mumbai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->