மனதை உலுக்கும் வழக்கு! சொந்த குடும்ப சிறுமிகள் மீதான வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!
heart wrenching case worker gets double life imprisonment case abusing his own family girls
சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 36 வயது தொழிலாளி ஒருவர் மீது மனிதநேயத்தை உலுக்கும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல், தனது முதல் மனைவியின் 16 வயது மகளையும், இரண்டாவது மனைவியின் 13 வயது மகளையும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆவடி அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். பின்னர் அவர் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீண்டநாள் விசாரணைக்குப் பிறகு இறுதிக்கட்டத்தை எட்டியது. வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரூ.1.64 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
heart wrenching case worker gets double life imprisonment case abusing his own family girls