நித்யானந்தா எங்கதான் இருக்காரு? கைலாசா நாடு எங்கே இருக்கு? உயர் நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார்? கைலாசா என்ற நாடு எங்கே உள்ளது? அங்கு செல்லும் வழி என்ன? பாஸ்போர்ட், விசா ஏதும் உள்ளதா? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய வேண்டாம் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதன்போது, நீதிபதிகள் நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து தெளிவாக விளக்கம் கேட்டு பல கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நித்யானந்தா தரப்பு, அவர் தற்போது ‘கைலாசா’ என்னும் நாடில் இருப்பதாகவும், அது ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், ‘யுஎஸ்கே’ (USK) எனப்படும் கைலாசா நாடு ஐநா அவையால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், வழக்கில் புதிய வழக்குரைஞரை நியமிக்க அனுமதி கோரியதற்கும் மதுரை அமர்வு ஒப்புதல் வழங்கி, விசாரணையை பின்னேற்றியுள்ளது. நித்யானந்தாவின் இருப்பிடம், அவரது உரிமைகள் குறித்த நிலைமைகள் குறித்து மேல்மட்ட விசாரணை தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HC madurai Nithyananda case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->