கரூரில் நேர்ந்த பெரும் சோகம்...! லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து...! - 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் துடிதுடித்து பலி...!
great tragedy occurred Karur terrible accident occurred when car hit lorry 3 people including 8month pregnant woman died
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), தனது மனைவி ஜனனி (27) மற்றும் 3 வயது மகள் துவிதாவுடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஜனனியும் அவருடன் இருந்தார்.அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம் பிரிவு சாலையை கார் கடந்து சென்றபோது, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் குறுக்கே கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்த சூழ்நிலையில், இருசக்கர வாகனத்தின் மீது மோதலைத் தவிர்க்கும் முயற்சியாக கார் ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.ஆனால் அந்த முயற்சி விபரீதமாக மாறியது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் அதிவேகமாக மோதியது.
மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், காரின் முன்பகுதி லாரியின் அடிப்பகுதிக்குள் புகுந்து நொறுங்கியது.இந்த பயங்கர விபத்தில் அரவிந்த், அவரது மனைவி ஜனனி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 வயது சிறுமி துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் காரணமாக நிகழ்ந்த இந்த துயர சம்பவம், ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான பயணத்தை சோகப் பயணமாக மாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, இன்னும் சில வாரங்களில் தாயாகப் போக இருந்த ஜனனி உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
great tragedy occurred Karur terrible accident occurred when car hit lorry 3 people including 8month pregnant woman died