தங்க நகைகள் அடமானம் மீதான நிபந்தனைகளை உடனே திரும்பபெறவேண்டும்.. திமுக செயற்குழுவில்  தீர்மானம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனபுதுச்சேரியில் நடைபெற்ற  மாநில திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில கழக துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., அ. தைரியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், ப. செல்வநாதன், ந. தங்கவேலு, பெ. வேலவன், ஆர். கோகுல், ப. இளம்பரிதி, பெ. பழநி, ஆர். ரவீந்திரன், எஸ். எஸ். செந்தில்குமார், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், ஜெ. வேலன் தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், வ. சீத்தாராமன், கோ. தியாகராஜன், ஜி.பி. சவுரிராஜன், து. சக்திவேல், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், சி. சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் இலக்கிய அணி  சீனு. மோகன்தாசு, விவசாய அணி வெ. குலசேகரன், ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், மீனவராணி ந. கோதண்டபாணி, கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொமுச அண்ணா அடைக்கலம், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், பொறியாளர் அணி  ஆ. அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி  ந. ரவிச்சந்திரன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, வர்த்தகர் அணி சு. ரமணன், தகவல் தொழில்நுட்ப அணி  தாமோ. தமிழசரன், மருத்துவர் அணி ஆனந்து ஆரோக்கியராஜ் அமைப்புசாரா ஓட்டுநர் அணி  ம. மதிமாறன், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், வர்த்தகர் அணித் தலைவர் செல்வா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ் நிமோத்தி, முகிலன், ரெமிஎட்வின், ஆளவந்தார், சிவதாசன், சிவசுப்ரமணியன் மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: –

• முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் எப்படி சீரும், சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தோமோ அதே வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கழகத் தொண்டர்களின் குடும்ப விழாவாக – மக்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடுது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

• முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102–வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜூன் 3–ஆம் தேதி காலை 09.00 மணியளவில் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் தொகுதிதோறும் அனைத்து கிளைகளிலும் கழக கொடி – தோரணங்களை கட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உரையாற்றிய எழுச்சியான பேச்சுகளை ஒலிபரப்பி, அந்தந்த கிளைகளில் உள்ள கழக முன்னோடிகளை வைத்து கழக இரு வண்ணக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்குவது என்றும், புதுச்சேரியில் உள்ள முதியோர் இல்லம் – கருணை இல்லம் – பார்வையற்றோர் பள்ளி – மனநலம் குன்றியோர் பள்ளிகளில் அன்று அறுசுவை உணவு வழங்குவது என்றும் இந்த மாதம் முழுவதும் இரத்ததான முகாம்கள் – மருத்துவ முகாம்கள் நடத்துவது என்றும் மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியோர்க்கு நலத்திட்டம் வழங்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

• நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாக கழக ஆட்சி தமிழகத்தில் அமையவும், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவும் கழகத் தலைவர் காட்டும் வழியில் புதுச்சேரி மாநில கழகம் பயணிப்பது என்றும் அதே வழியில் தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியை புதுச்சேரியிலும் நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில் அமையவும் நாம் அயராது பாடுபட உறுதியேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

• எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை தனது (ஏஜெண்டுகள்) ஆளுநர்கள் மூலம் முடக்கிவரும் ஒன்றிய அரசு தமிழ்நாடு திராவிடமாடல் ஆட்சியின் பத்திற்கும் மேற்பட்ட சட்டமன்ற தீர்மானங்களை ஜனநாயக மரபுக்கு மாறாக தடுத்து வைத்த ஆளுநரின் அடாவடியை உச்சநீதிமன்ற போராட்டத்தால் உடைத்தெரிந்து இந்திய வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் தளபதியாரின் வீரமிகு வெற்றியை இச்செயற்குழு பாராட்டுகிறது.

• கொள்கை ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் ஒன்றிய அரசோடு முரண்பட்டு நின்றாலும், நாட்டின் இறையாண்மை மீது நிகழ்த்தப்படும் பகல்காம் தீவிரவாத படுகொலையைக் கண்டித்து இந்திய இராணுவத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் மிகப்பெரிய பேரணியை நடத்திக்காட்டியதுடன், ஒன்றிய அரசு இந்திய அரசின் சார்பில் உலக நாடுகளுக்கு அனுப்பிய தூதுக்குழுவின் ஒரு குழுவிற்கு கழகத்தின் துணைப் பொதுச் செயலர் திருமதி. கனிமொழி அவர்களை தலைமை ஏற்க வைத்து ரஷியா போன்ற நாடுகளில் நமது நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்கச் செய்த கழகத் தலைவர் தளபதியாரின் நாட்டுப்பற்றில் நாங்கள் சலைத்தவர்களில்லை என்ற எடுத்துக்காட்டிற்கு இக்கூட்டம் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது.

• தங்க நகைகள் அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது ஒன்றிய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற்று நகைக் கடன்கள் பழைய முறையில் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று ஒன்றியை அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

• சமீபத்தில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று புதுச்சேரியின் பிரச்சனைகள், நிதிச்சுமைகள், வளர்ச்சித் திட்டங்கள், அதிகாரிகளின் அடங்காத்தன்மை இவைகளுடன் மாநில அந்தஸ்து போன்றவைகளை பிரதமர் முன் எடுத்துரைக்கும் வாய்ப்பைத் தவரவிட்டு, கூட்டத்தை புறக்கணித்த புதுச்சேரி மாநில முதல்வரின் ஜனநாயகமற்ற மக்கள் விரோத செயல்பாட்டை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

• மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் விதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லி அழைத்துச் செல்வது என்று முதல்வர் அறிவித்ததை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

• கடந்த சட்டப்பேரவையில் உறுதியளித்ததுபோல் சேதராப்பட்டு 850 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலைகள், பஞ்சாலை இடங்களில் மால்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருடன் இணைந்து செயல்படுத்துதல், அரசின் 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் போன்ற திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி இவ்வரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறோம்.

• நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 50 சதவீத இடத்தை முழுமையாகப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

. புதுச்சேரி அரசின் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான நேரடி ஆள்சேர்ப்பில் EWS இட ஒதுக்கீட்டின் 418 பதவிகளுக்கு 25 இடங்கள் EWSக்கு ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது, UR, MBC, SC, OBC பிரிவுகளுக்கான இடங்களை EWSக்கு தாரை வார்ப்பது சமூகநீதிக்கு எதிரானது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு செயல்பாட்டிற்கு வந்த இந்த இட ஒதிக்கீட்டினை அந்த ஆண்டுக்கு முன்பு இருந்த காலிப் பணியி டங்களையும் சேர்த்து EWS வழியில் நிரப்புவது விதிகளுக்கு முரணானதாகும் ஆகவே இந்த விதி மீற்றரில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

• புதிய கல்விக்கொள்கைப்படி மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தமாட்டோம் என்று அரசு உறுதியளிக்க வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold ornaments must be reclaimed immediately as per the conditions related to the bond Resolution in the DMK executive committee


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->