15 வயது சிறுவன் ஓட்டிய கார்... பறிபோன சிறுமியின் உயிர்... திருப்பூரில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் 15 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் இவர் தாராபுரம் சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியும் மூன்றாவது மகள் தீபிகா(11), சாலையோரமாக ஹோட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக 15 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சிறுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காரை ஓட்டி வந்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுமையின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சிறுவன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl killed in car collision in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->