மறைந்த ஜானகி அம்மாள் அவர்களின் வாரிசுக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை!  - Seithipunal
Seithipunal


காரைக்கால் மாவட்ட முப்படை முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர் காலஞ்சென்ற வீரத்தாய் திருமதி ஜானகி அம்மாள் அவர்களின் வாரிசுக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. 

காரைக்கால் மாவட்ட முப்படை முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம்  காரைக்கால் நேரு நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளர் ராபர்ட் சார்லஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். காரைக்கால் மாவட்ட உறுப்பினர் சந்தோஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் காரைக்கால் உறுப்பினர் வீரத்தாய் திருமதி ஜானகி அம்மாள் அவர்களின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது வாரிசுக்கு சங்கத்தின் சார்பில் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.3000/- வழங்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசாக டிபன் கேரியர் வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் இராணுவ வீரரின் மகனும் காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரும் தொழிலதிபருமான முருகதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கூட்டத்தில் கலந்தகொண்ட அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தை காரைக்கால் உறுப்பினர்கள் சரவணன், பரமசிவம், வெங்கடேஷ், நித்யானந்தம் ஆகியோர் சிறப்பான முறையில் நடத்தினார்கள். புதுச்சேரி சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், தொம்னிக், ராமமூர்த்தி, லட்சுமிநாராயணன், முரளி, முருகாணந்தம் உட்பட சுமார் நாற்பது முன்னாள் இராணுவ வீரர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Funeral Assistance for Late Janaki Ammals Heir


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->