தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கே.பி.ஆர் அணையின் முழு கொள்ளவான 52 அடியில் 50 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.பி.ஆர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 439 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றங்கரை ஓரம் கொண்டு செல்லக்கூடாது எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flood warning for 5 districts in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->