லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல் : நோயாளி உள்பட 5 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல் : நோயாளி உள்பட 5 பேர் காயம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸ் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துதிற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வேறொரு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அதன் பின்னர் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எறிந்தது.

இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples injured for ambulance accident near kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->