திருச்சி : முன் விரோதத்தால் வாலிபரை பாரில் வைத்து கொலை செய்த கும்பல் - 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி : முன் விரோதத்தால் வாலிபரை பாரில் வைத்து கொலை செய்த கும்பல் - 5 பேர் கைது.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே எஸ் கள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாபு. இவர் சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். அங்கு இவருக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பாபு கடந்த 6 ஆம் தேதி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் பாபுவை சேர்த்து சரமாரியாகத் தாக்கி அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வி.துறையூரைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களில் முக்கிய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப்ரோபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for murder case in trichy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->