ரெயில்வே துறையில் வேலை.! 56 லட்சத்தை சுருட்டிய தம்பதியினர் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


ரெயில்வே துறையில் வேலை.! 56 லட்சத்தை சுருட்டிய தம்பதியினர் - போலீசார் அதிரடி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோணத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவிதா. இவர் நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு ஐரேனியபுரத்தைச் சேர்ந்த அபிஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா  என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். 

இருவரும் தங்களுக்கு ரயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதேபோல் அவர்கள் பலரிடம் சுமார் 56 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர். ஆனால் கூறியது போல் வேலை வாங்கித் தரவில்லை.

அதனால், நான் கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டதற்கு அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர்.

இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. ஆகவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன் படி காவல்துறையினர் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட மூன்று பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்துச் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for money fraud in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->