பூட்டிய அறைக்குள் சிக்கிய 03 வயது சிறுவனால் பதற்றம்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி கே.வி.கே. நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தாதா பீர். ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இன்று காலையில் அவர் பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் அவரது மனைவி, மற்றும் 03-வயது மகன் இருந்துள்ளனர். அப்போது மனைவி வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

வீட்டின் உள்அறைக்குள் சென்ற விளையாடிய சிறுவன் கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக பிறகு அந்த சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. கதை திறக்க முடியாததால் சிறுவன் பயத்தில் அறைக்குள் இருந்து கதறி அழுது உள்ளான். அவனது அழுகுரல் கேட்ட தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர்.  

ஆனால், அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன சிறுவனின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள்  விரைந்து வந்து அந்த வீட்டின் உல் உள்ள அறையின் கதவை  உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Firefighters safely rescue a 3 year old boy trapped in a locked room


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->