குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! கொட்டுவதை வீடியோ எடுத்து கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு! - வேலூர் மாநகராட்சி! - Seithipunal
Seithipunal


தரம் பிரிக்காமல் தந்தால் ரூ.100! வணிக நிறுவனங்களுக்கு ரூ.500! வணிக வளாகங்களுக்கு ரூ.1000!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டு விட்டது. குப்பைகளை சாலைகளில் கொட்டுவது, காலியிடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016ன் படி வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கல் கால்வாய்கள் மற்றும் காலி மனை இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்கா விட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1000 என அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தெருக்கள் வடிகால்வாய்கள் மற்றும் காலி மனை இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். குப்பைகளை வீட்டிற்கு வெளியே எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம். குப்பைகளை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும்" என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது இந்த நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fine for littering in Vellore Corporation


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->