ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு.. மச்சானை போட்டு தள்ளிய மாமா.! செங்கல்பட்டில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆம்லெட் சாப்பிடும் போது ஏற்பட்ட பிரச்சனையில் மச்சானை மாமா கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (30) என்றவரும், அவருடைய மாமா முருகன் (32) என்றவரும் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலை சுசுகி ஷோரூம் அருகில் உட்கார்ந்து மது அருந்தி இருக்கின்றனர். அப்போது அவர்கள் பார்சலில் கொண்டு வந்திருந்த ஆம்லெட்டை சாப்பிடும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நல்ல மது போதையில் இருந்த முருகன் செல்லப்பன் மீது ஆத்திரம் அடைந்து கட்டையால் தாக்கியுள்ளார். இதில், வெகுவாக காயமடைந்த செல்லப்பன் சுருண்டு விழுந்து மயங்கியுள்ளார். அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க செல்லப்பன் மயங்கி விழுந்ததை பார்த்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் முருகனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fight for omlet one death in chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->