மாமியாரை தவறாக பேசிய மருமகன்...ஆத்திரத்தில் மாமனார் துணிகரம்..!
Father in Law Kills his Son In Law In Thenkasi
மாமியாரை தவறாக பேசியதால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகள் கற்பகஜோதிக்கு டி.என்.புதுக்குடியை சேர்ந்த சரத்குமார் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 5 சவரன் நகை போடுவதாக பேசி, திருமணத்தின் போது 2 சவரன் நகை போட்ட நிலையில் தலைபொங்கல் வரிசையில் 3 சவரன் நகை தந்தாக கூறபடுகிறது. அப்போது மாமியாரை சரத்குமார் தரகுறைவாக பேசியுள்ளார்.
இதில், கோபமடைந்த மாமனார் மாமியர அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், சரத்குமார் மாமனார் வீட்டிற்கு வந்தும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்படுள்ளார். இதனால், ஆத்திரமைடைந்த கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளால் சரத்குமாரை வெட்டியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரத்குமார் பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சரத்குமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father in Law Kills his Son In Law In Thenkasi