மின் இணைப்புகள் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம்,விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  இந்தியாவிற்கே முன்மாதிரியாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார்கள். அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள். 

அதனடிப்படையில், விவசாயிகள் வாங்கிய பொதுக்கடன்களை தள்ளுபடி செய்தும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கிய நகைக்கடன்களை தள்ளுபடி செய்தும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, வேளாண் பெருங்குடி மக்களை பாதுகாத்து வருகிறார்கள்.

அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது உற்பத்தித்திறனை குறைத்து, இலாபத்தினை அதிகரித்திடவும், வேளாண் இயந்திரங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இயந்திரங்களை வாங்குவதற்கான நிதியுதவியினையும், சிறு விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள், தார்ப்பாய்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக, வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீட்டு காப்பீடுகளும், பங்குப்பத்திரங்களும் தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் வழிவகை செய்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் துயரைத் துடைத்திடவும், அவர்கள் மேற்கொள்ளும் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தார்கள். 

அவ்வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புக்களை வழங்கிடவும் உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி உள்ளார்கள்.

தமிழகத்தில் குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கி, வரலாற்று சாதனையை  தமிழ்நாடு முதலமைச்சர்  நிகழ்த்தியுள்ளார்கள். 

கடந்த காலங்களில் மின் இணைப்பிற்காக ரூ.2.5 இலட்சம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து வந்த நிலையினை மாற்றி, எவ்வித பொருளாதாரச் செலவும் இல்லாமல் விவசாயிகளின் நலன் காத்திட இலவச மின்சாரத்தினை வழங்கியுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் மாவட்டத்தில் மொத்தம் 3,862 விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.4,223 இலட்சம் மதிப்பீட்டிலான மின் இணைப்பு வழங்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதில், 2024-2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் 172 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

இத்திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் இணைப்பு பெற்று பயன்பெற்ற, மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், இராஜகம்பீரம் ஊராட்சிக்குட்பட்ட சலுப்பானோடை கிராமத்தை சேர்ந்த திரு.பாண்டி அவர்கள் (பயனாளி) தெரிவிக்கையில்,

நான் இராஜகம்பீரம் ஊராட்சிக்குட்பட்ட சலுப்பானோடை கிராமத்தில் வசித்து வருகிறேன். சலுப்பானோடை கிராமத்தில் புல எண்: 43/5A-ல் உள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, புதிய விவசாய மின் இணைப்பிற்காக காத்திருந்தேன். விவசாய நிலத்தை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அவ்வப்போது வரும் மழையை நம்பி, அதனை அடிப்படையாக கொண்டு, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தேன்.

முன்னதாக, பல வருடங்களுக்கு முன்பு எனது விவசாய நிலத்திற்கு ஆழ்துளை கிணற்றிக்கான விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் பயனில்லாமல் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலின் போது விவசாய மின் இணைப்பு வழங்குவேன் என்று வாக்குறுதியினை விவசாயிகளுக்கு அளித்தார்கள். அந்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, என்னைப் போன்ற விவசாயிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். 
இயல்பு திட்டத்தின் கீழ் எனக்கு தற்போது புதிய விவசாய மின் இணைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் இணைப்பை கொண்டு சுமார் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றேன். எங்களைப் போன்ற விவசாயிகளின் நிலையை சிந்தித்து, நாங்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என பயனாளி திரு.பாண்டி அவர்கள் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், புதிதாக விவசாய மின் இணைப்பு பெற்று, பயன்பெற்ற சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கோமாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கார்த்திகை அம்மாள்  (பயனாளி) தெரிவிக்கையில்,
 நான் மலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். கோமாளிபட்டி கிராமத்தில் புல எண்: 159/3B-ல் உள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, புதிய விவசாய மின் இணைப்பிற்காக காத்திருந்தேன். விவசாய மின் இணைப்பு இல்லாமல் மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தோம். தமிழக முதல்வரின் ஆணையின்படி, இயல்பு திட்டத்தின் கீழ் எனக்கு கடந்த 07.11.2024 அன்று புதிய விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த மின் இணைப்பை கொண்டு 2.25 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, அதன் வாயிலாக எங்களது வாழ்வாதாரம் செழித்துள்ளது. புதிதாக விவசாய மின் இணைப்பு வழங்க உத்தரவிட்ட  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களைப் போன்ற விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பயனாளி திருமதி கார்த்திகை அம்மாள் அவர்கள் தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம்,விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  இந்தியாவிற்கே முன்மாதிரியாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார்கள். அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள். 

அதனடிப்படையில், விவசாயிகள் வாங்கிய பொதுக்கடன்களை தள்ளுபடி செய்தும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கிய நகைக்கடன்களை தள்ளுபடி செய்தும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, வேளாண் பெருங்குடி மக்களை பாதுகாத்து வருகிறார்கள்.

அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது உற்பத்தித்திறனை குறைத்து, இலாபத்தினை அதிகரித்திடவும், வேளாண் இயந்திரங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இயந்திரங்களை வாங்குவதற்கான நிதியுதவியினையும், சிறு விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள், தார்ப்பாய்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக, வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீட்டு காப்பீடுகளும், பங்குப்பத்திரங்களும் தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் வழிவகை செய்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் துயரைத் துடைத்திடவும், அவர்கள் மேற்கொள்ளும் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தார்கள். 

அவ்வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புக்களை வழங்கிடவும் உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி உள்ளார்கள்.

தமிழகத்தில் குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கி, வரலாற்று சாதனையை  தமிழ்நாடு முதலமைச்சர்  நிகழ்த்தியுள்ளார்கள். 

கடந்த காலங்களில் மின் இணைப்பிற்காக ரூ.2.5 இலட்சம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து வந்த நிலையினை மாற்றி, எவ்வித பொருளாதாரச் செலவும் இல்லாமல் விவசாயிகளின் நலன் காத்திட இலவச மின்சாரத்தினை வழங்கியுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் மாவட்டத்தில் மொத்தம் 3,862 விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.4,223 இலட்சம் மதிப்பீட்டிலான மின் இணைப்பு வழங்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதில், 2024-2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் 172 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

இத்திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் இணைப்பு பெற்று பயன்பெற்ற, மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், இராஜகம்பீரம் ஊராட்சிக்குட்பட்ட சலுப்பானோடை கிராமத்தை சேர்ந்த திரு.பாண்டி அவர்கள் (பயனாளி) தெரிவிக்கையில்,

நான் இராஜகம்பீரம் ஊராட்சிக்குட்பட்ட சலுப்பானோடை கிராமத்தில் வசித்து வருகிறேன். சலுப்பானோடை கிராமத்தில் புல எண்: 43/5A-ல் உள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, புதிய விவசாய மின் இணைப்பிற்காக காத்திருந்தேன். விவசாய நிலத்தை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அவ்வப்போது வரும் மழையை நம்பி, அதனை அடிப்படையாக கொண்டு, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தேன்.

முன்னதாக, பல வருடங்களுக்கு முன்பு எனது விவசாய நிலத்திற்கு ஆழ்துளை கிணற்றிக்கான விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் பயனில்லாமல் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலின் போது விவசாய மின் இணைப்பு வழங்குவேன் என்று வாக்குறுதியினை விவசாயிகளுக்கு அளித்தார்கள். அந்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, என்னைப் போன்ற விவசாயிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். 
இயல்பு திட்டத்தின் கீழ் எனக்கு தற்போது புதிய விவசாய மின் இணைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் இணைப்பை கொண்டு சுமார் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றேன். எங்களைப் போன்ற விவசாயிகளின் நிலையை சிந்தித்து, நாங்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என பயனாளி திரு.பாண்டி அவர்கள் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், புதிதாக விவசாய மின் இணைப்பு பெற்று, பயன்பெற்ற சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கோமாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கார்த்திகை அம்மாள்  (பயனாளி) தெரிவிக்கையில்,
 நான் மலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். கோமாளிபட்டி கிராமத்தில் புல எண்: 159/3B-ல் உள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, புதிய விவசாய மின் இணைப்பிற்காக காத்திருந்தேன். விவசாய மின் இணைப்பு இல்லாமல் மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தோம். தமிழக முதல்வரின் ஆணையின்படி, இயல்பு திட்டத்தின் கீழ் எனக்கு கடந்த 07.11.2024 அன்று புதிய விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த மின் இணைப்பை கொண்டு 2.25 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, அதன் வாயிலாக எங்களது வாழ்வாதாரம் செழித்துள்ளது. புதிதாக விவசாய மின் இணைப்பு வழங்க உத்தரவிட்ட  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களைப் போன்ற விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பயனாளி திருமதி கார்த்திகை அம்மாள் அவர்கள் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers benefited under the electricity connections scheme thanked the Chief Minister


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->