மர்ம முறையில் மரணம் அடைந்த விவசாயி.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ராமாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (60). இவருக்கு திருமணமாகி மங்கம்மாள் என்ற மனைவியும் 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று அவரது தோட்டத்தில் உள்ள சாமந்தி பூக்களை பறித்து ஒரு பகுதியை இருசக்கரவாகனத்தில் எடுத்துகொண்டு வீடு கொண்டு சென்றுள்ளார்.

மறுபகுதியை எடுக்க வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அவரை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்  அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ராமாபுரம் சந்தைமேடு என்ற இடத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

farmer murder in Chengalpattu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->