#கிருஷ்ணகிரி || மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயபிரகாஷ்(50). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் நேற்று மதியம் அருகே உள்ள விவசாய நிலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றுள்ளார்.

அப்பொழுது இடியுடன் கனமழை பெய்ததால், மின்னல் தாக்கி ஜெயப்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர், உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed by lightning in Krishnagiri


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->