போலி மருத்துவரை பொறிவைத்து பிடித்த எம்பி.! கதிகலங்கிய 8ஆம் வகுப்பு டாக்டர்.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செல்வம் என்பவருடைய லெட்டர் பேடை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். 

சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு காய்ச்சலுக்கு ஊசி போடுவது, மாத்திரைகள் வழங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து நாமக்கல் எம்பி சின்ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே தனது ஆதரவாளர்கள் மூன்றுபேரை நோயாளிகளைப் போல தங்கராஜ் இடம் அனுப்பி வைத்துள்ளார். 

டாக்டரை போலவே டெதஸ்கோப் எல்லாம் வைத்து இதயத் துடிப்பை பார்த்து மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளார். திரும்பி வந்த எம்பியின் ஆதரவாளர்கள் ஒரு டாக்டர் போலவே அவர் செயல்படுவதாக கூறியுள்ளனர். 

சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அதிரடியாக திடீரென தங்கராஜ் வீட்டுக்குள் எம்பி சின்ராஜ் சென்றார். சென்று சோதனை போட்டபோது அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து டாக்டர் செல்வத்திடம் விசாரித்த பொழுது அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக பணிபுரிந்தார். ஆனால் அவர் தனியாக கிளினிக் நடத்துவது எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fake doctor found in namakal


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->