#BREAKING | ஐடி ரெய்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணம்! சிக்கிய சச்சிதானந்தம் வீடு! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal



தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்m ஈரோட்டை சேர்ந்த டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 21. கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஈரோடு : சக்தி நகர் மூன்றாவது நகர் வீதிகள் சச்சிதானந்தம் என்ற டாஸ்மார்க் லாரி ஒப்பந்ததாரரின் வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சச்சிதானந்தம் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் கட்டு கட்டாக 2.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சச்சிதானந்தத்தின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. 2.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode IT Raid TASMAC lorry Contractor Home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->