#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிட உள்ளது.

சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி தற்போது வாக்கு என்னும் மையமான செயல்பட உள்ளது. அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode East By Poll 11 am


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->