செமஸ்டர் தேர்வில் தோல்வி.! என்ஜினீயரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு.!
Engineering student commits suicide in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மகன் ஜீவன் ஆனந்தன்(17) நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், ஜீவன் ஆனந்தன் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று, வீட்டிலிருந்து அனைவரும் வெளியே சென்ற நிலையில் தனியாக இருந்த ஜீவன் ஆனந்தன், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பள்ளி முடிந்து ஜீவன் ஆனந்தனின் தங்கை காவியா வீட்டிற்கு வந்தபோது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் காவிய கதவைத் தட்டி உள்ளார். ஆனால் கதவை திறக்காததால், காவியா ஜன்னல் வழியாக பார்த்த போது ஜீவன் ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் உயிரிழந்த ஜீவன் ஆனந்தனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Engineering student commits suicide in tiruvallur