தொழிலதிபர் வீட்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள் - காட்பாடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்த தொண்டான் துளசி பகுதியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான் துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

enforcement department officer raid in vellore katpadi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->