தங்கை இறந்த சோகம்... அக்கா எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தங்கை இறந்த துக்கத்தில் அக்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் தங்கையின் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து தங்கை இறந்த சோகத்தில் ஐஸ்வர்யா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தங்கை இறந்த துக்கம் தாங்காமல் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஐஸ்வர்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elder sister commits suicide in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->