சிக்கி தவிக்கும் எடப்பாடி ..! செந்தில் பாலாஜியுடன் கைகோர்த்த அண்ணாமலை..? உருவாகிறது கொங்கு ஜனதா கட்சி..!
Edappadi is stuck Annamalai joins hands with Senthil Balaji Kongu Janata Party is being formed
தமிழக அரசியலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தொடங்கி, தற்போதும் அண்ணாமலையின் முக்கிய இலக்கு எடப்பாடி பழனிசாமி என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்ணாமலை பதவியில் இருந்து விலகிய பிறகும், கூட்டணி விவகாரங்கள் குறித்து தாம் பேச மாட்டேன் என்று தெரிவித்து வந்தாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்பான கேள்விகளில் அவர் நேரடியாகவும் கடுமையாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். “அதிமுக ஓனர் எடப்பாடி அல்ல, கூட்டணியின் முடிவு அமித்ஷா வழியே தான் நடைபெறும்” என்ற அவருடைய கூற்று அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் அரசியல் எதிரிகளின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி முதன்மை இடத்தை பிடித்துள்ளார். அடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர்களை அரசியலிலிருந்து விலக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாக அண்ணாமலையைக் கிட்டத்தட்ட அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறுவதாவது:
“அடுத்தடுத்த கட்டமாக அண்ணாமலை தனி கட்சி தொடங்க உள்ளார். அதன் பெயர் ‘கொங்குநாடு ஜனதா கட்சி’ என்று இருக்க வாய்ப்பு உள்ளது. இது கொங்கு மண்டலத்தை மையப்படுத்தியே செயல்படும். அங்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, செந்தில் பாலாஜி ஆகியோருக்குள் நேரடி மோதல் நிலவுகிறது. பாஜக ஏற்கனவே எடப்பாடியின் முக்கிய ஆதரவாளரான வேலுமணியை தங்களுடன் இணைத்துள்ளது. இதனால் கொங்குநாடு அரசியல் சமன்பாடு மாறியுள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, தாம் உருவாக்கிய வாக்கு வங்கியை எடப்பாடி பழனிசாமிக்கு ஒப்படைக்க விரும்பவில்லை. அதிமுகவின் வெற்றி தனது தோல்வியாக மாறக்கூடாது என்பதற்காகவே, அவர் புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ளார். இதில் திமுகவும் மறைமுக ஆதரவை வழங்குகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே” எனக் குறிப்பிட்டார்.
இதனால் வரவிருக்கும் தேர்தல்களில், கொங்கு மண்டலம் முழுவதும் “எடப்பாடி பழனிசாமியா? அண்ணாமலையா?” என்ற போட்டி சூடுபிடிக்க உள்ளது. திமுகவின் திட்டமிட்ட உத்தி, அண்ணாமலையின் தீவிரம், அதிமுகவின் வலிமை – இந்த மூன்றின் மோதல் தான் அடுத்த கட்டத்தில் தமிழக அரசியலின் முக்கிய களம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
English Summary
Edappadi is stuck Annamalai joins hands with Senthil Balaji Kongu Janata Party is being formed