நாமக்கல்லில் கத்தை கத்தையாக ‌ரூ.2.83 கோடி பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 

தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் 50 ஆயிரம் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

ஆனால் அதனையும் மீறி சிலர் உரிய ஆவணம் இன்றி பல கோடி ரூபாயை எடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத இரண்டு கோடியே 83 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI flying squad seized rs2crs 83 lakhs in namakkal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->