அதிர்ந்த பூமி‌... அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்.. திருவாரூரில் பெரும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் விளம்பர பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு மருத்துவக் கல்லூரி போன்று மக்கள் அதிகம் வரும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. 

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் பொதுமக்கள் அலரை அடித்து ஓட்டம் பிடித்தனர். 

திடீரென ஏற்பட்ட பயங்கர வீடு சத்தம் விமானம் ஏதேனும் விபத்து நடந்திருக்குமா? அல்லது நில அதிர்வா? என்ற கோணத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வெடி சத்தம் திருவாரூர் விளமல், சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி, அடியேக்கமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earth vibrates with heavy sound near thiruvarur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->