பொள்ளாச்சி : மதுபோதையில் மரத்தில் ஏறி உறங்கிய ஆசாமி - 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் மரத்தில் ஏறி உறங்கிய ஆசாமி - மூன்று மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சத்தம் போட்டு கீழே இறங்குமாறுத தெரிவித்தனர். ஆனால், அது அந்த நபர் காதில் விழவில்லை. இதையடுத்து போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த நபரை கீழே இறக்க முயற்சி செய்தனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ராட்சச கிரேன் கொண்டுவந்து அதில், மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனை மரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக தூக்கி கீழே கொண்டு வந்தனர். 

அந்த போதை ஆசாமியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை செம்மனாம்தி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பதும், அவர் மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மது போதையில் மர உச்சிக்கு சென்று உறங்கிய நபரின் இந்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drunk man slept on palm tree in pollachi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->